ஸ்ரீ பேச்சிபம்மன் துணை
ஓம் ஞான ஸ்ரீ பேச்சிபம்மன் நம:

lamp

lamp

பேச்சி மதுரைக்காஞ்சி



  • பே(ய்)ச்சியம்மன்

    'பேச்சியம்மன்' என்பது 'பே(ய்)ச்சியம்மன்' என்பதின் திரிந்த வடிவமாக கருதப்படுகிறது. சங்க இலக்கியங்களில் பேய் மகளிர் குறித்த பதிவுகள் இருக்கின்றன.
    "பிணக்கோட்ட களிற்றுக் குழம்பி னிணம்வாய்ப் பெய்த பேய்மகளி ரினையொலி யிமிழ் துணைங்கைச் சீர்ப் பிணை யூப மெழுந்தாட வஞ்சு வந்த போர்க்களம்" (மதுரைக்காஞ்சி 24 -28)
    "போரிலே வீழ்ந்த நல்ல தந்தங்களையுடைய யானைப் பிணங்களின் குருதியைக் குடித்து, சிதறிக் கிடந்த குறைதலைப் பிணம் எழுந்து தன்னோடு ஆடும்படி பேய்மகள் துணங்கைக் கூத்தாடுவாள்" என்று பாடுகிறார் மாங்குடி மருதனார். புறநானூற்றிலும் இவை மிகுதியாகக் காணப்படுகிறது.
    "பெருமிழலைக் குறும்பர்க்கும் பேயார்க்கு மடியேன்" என காரைக்கால் அம்மையார் குறித்து திருத்தொண்டர் தொகை போற்றுகிறது.
    "பேயரசு செய்தால் பிணந்தின்னும் சாத்திரங்கள்" என பாரதியின் பாஞ்சாலி சபதத்தில் திரௌபதை கூறுவதையும் நோக்கலாம். எனவே பேய் மகளிர்க்கும், பிணத்திற்குமான தொடர்பு சங்க காலம் தொட்டு நீடித்து வந்துள்ளது எனவும் கருதுகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக